search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுமை வழி சாலை திட்டம்"

    சேலம்-சென்னை பசுமை வழி சாலை திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதி இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். #Valarmathi
    சென்னை:

    சேலம்-சென்னை பசுமை வழி சாலை திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    வடபழனி போலீசார் வளர்மதி மீது ஏற்கனவே ஜனவரி மாதம் தனியாக வழக்கு பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கில் இப்போது வளர்மதி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    வடபழனி ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் அச்சமில்லை, அச்சமில்லை என்ற பெயரில் ஆடியோ ஒன்று கடந்த ஜனவரி மாதம் 24-ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வளர்மதி பேசினார். அவரது பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் விதத்தில் தேச துரோக செயலில் ஈடுபடும் வகையில் இருந்ததாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில்தான் இப்போது வளர்மதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் போடப்பட்ட வழக்கில் வளர்மதியை கைது செய்ததற்கான உத்தரவை சேலம் மத்திய சிறையில் போலீசார் ஒப்படைத்திருந்தனர். இதனை ஏற்று அந்த வழக்கில் ஆஜர் படுத்துவதற்காக சேலத்தில் இருந்து வளர்மதியை சென்னைக்கு அழைத்து வந்தனர். சைதாப்பேட்டை கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்படுகிறார். இந்த வழக்கிலும் நீதிமன்ற காவலில் வளர்மதி சிறையில் அடைக்கப்பட உள்ளார். #Valarmathi
    ‘சென்னை-சேலம் பசுமை வழி சாலை திட்டத்துக்கு எதிராக சட்ட ரீதியாக போராடுவோம்’ என்று சேலத்தில் அன்புமணி ராமதாஸ் கூறினார். #AnbumaniRamadoss #PMK
    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தில் நேற்று பா.ம.க. சார்பில் சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டம் குறித்து மக்கள் சந்திப்பு மற்றும் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்கி விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

    பின்னர் அவர் பேசுகையில், ‘நாட்டின் வளர்ச்சி திட்டத்துக்கு நான் எதிரானவன் அல்ல. விவசாய நிலங்களை அழித்து எந்தவொரு திட்டமும் செயல்படுத்த வேண்டாம். பசுமை வழி சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் முதல்-அமைச்சர் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதையும் மீறி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் அதை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்துவேன்’ என்றார்.

    முன்னதாக அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறேன். இந்த கருத்துகளை ஒரு அறிக்கையாக தயாரித்து மத்திய, மாநில அரசுகளிடம் கொடுப்பேன். மேலும் மத்திய மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து இந்த திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மாற்று வழிப்பாதை குறித்தும் விளக்கம் அளிப்பேன்.

    அதையும் மீறி பசுமை வழி சாலை திட்டத்தை செயல்படுத்த முயன்றால் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடுவோம். பசுமை வழி சாலை திட்டம் குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொய் கூறி வருகிறார்.

    மேலும் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடாக குறைந்தபட்சமாக ரூ.21 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.9.4 கோடி வரை ஒரு ஹெக்டேருக்கு வழங்கப்படும் என்று தவறாக கூறப்படுகிறது. இந்த பசுமை வழிச்சாலை தாம்பரம் அருகே உள்ள படப்பை என்ற இடத்தில் நிறைவு பெறுகிறது.

    அங்கிருந்து சென்னைக்கு செல்வதற்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக குறைந்தது 2 மணி நேரம் ஆகும். எனவே சேலத்தில் இருந்து சென்னைக்கு 5 மணி நேரம் ஆகும். இந்த சாலை அமைப்பது தொடர்பாக எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை.



    கஞ்சமலையில் உள்ள இரும்பு தாதுக்களை எடுப்பதற்காகவே இந்த சாலை அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இரும்பு தாதுவை எடுக்க விடமாட்டோம். பசுமை வழி சாலை திட்டத்துக்கு எதிராக போராடும் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை போலீசார் கைது செய்வது கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத்தில் பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுவேன்.

    பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சமூக நீதி போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி உள்ளார். அவரை கண்டித்து நாளை (அதாவது இன்று) தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. மேலும் இந்த பேச்சுக்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AnbumaniRamadoss #PMK
    பசுமை வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மாவட்டங்களில், மக்களை சந்தித்து 26, 27-ந் தேதிகளில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கருத்து கேட்க இருப்பதாக ராமதாஸ் தகவல் தெரிவித்துள்ளார். #Ramadoss #GreenwayRoad
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கும், மேற்கு மாவட்டங்களின் நுழைவாயிலாகத் திகழும் சேலம் நகருக்கும் இடையே வலிமையான, வசதியான சாலைக் கட்டமைப்பு இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால், சென்னையில் இருந்து சேலத்திற்கு உளுந்தூர்பேட்டை வழியாக ஒரு தேசிய நெடுஞ்சாலை, வேலூர், கிருஷ்ணகிரி வழியாக இன்னொரு நெடுஞ்சாலை என இரு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் இருந்து திண்டிவனம், கிருஷ்ணகிரி வழியாக 3-வது தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இவைதவிர மாநில சாலைகளும் உள்ளன. இவ்வளவும் போதாதென சேலத்திற்கு புதிதாக 8 வழி சாலை அமைக்க வேண்டிய தேவை என்ன? என்பது தான் ஒட்டுமொத்த தமிழகமும் எழுப்பும் வினா ஆகும்.

    பசுமைவழி சாலையை எதிர்ப் பவர்கள் அனைவரும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிசெய்பவர்கள் கூறுவது கேலிக்கூத்தானது. பா.ம.க. வளர்ச்சிக்கு எதிரான கட்சி அல்ல. ஆனால், ஒரு நிறுவனம் வாழ்வதற்காக 7,500 குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. மக்களை சொந்த ஊரில் அனாதைகளாக்கும் பசுமைச் சாலை திட்டம் கைவிடப்பட வேண்டும்.



    இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, பசுமைவழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படவுள்ள காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை பா.ம.க. நடத்தவுள்ளது. பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் கருத்துக் கேட்பு கூட்டங்களில் விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டு நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பார் கள். இந்த நிகழ்ச் சிகள் நடைபெறும் இடம், நேரம் உள்ளிட்ட விவரங்கள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss #GreenwayRoad
    ×